Wednesday, December 3, 2014

ஏளன சிரிப்பு சிரிக்கும் கூட்டம்

ஆசிரியர் தொழிலுக்குப் படிக்கிறியா? என்று கேட்டு ஒருவகையான ஏளன சிரிப்பு சிரிக்கும் கூட்டம் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது, என்னமோ இவர்கள் ஆசான் இல்லாமெலெயே முன்னேறி வந்தது போலேதான். மனம் வலித்தது. இருந்தும் வெளியே புன்னகைத்தேன்.. எதிர்த்து பேசினால் “வாயாடி” என்ற பட்டம் கிடைத்து விடும். அம்மா சொன்னாள் நாம் பேசும் வார்த்தை காயபடுத்தி விட கூடாதென்று, அதனால் அமைதியாய் நின்றேன்.
அவர்களுக்கு என் திறமையை நிருப்பிக்க தேவையில்லை. என் நோக்கம் நன்முறையில் கற்று தரவேண்டியது மட்டுமே. 

No comments:

Post a Comment